அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி, அலகாபாத் ஐகோர்ட்டில் 2 சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே சமயத்தில், அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்ட உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தருமாறு உத்தரபிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
கோப்புப்படம்
இந்தநிலையில், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி கபூர், ராமராணி பஞ்சாபி என்ற 2 சகோதரிகள் உரிமை கோரியுள்ளனர். அவர்கள் இதுதொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ கிளையில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்துள்ளனர்.
அம்மனுவில் என் தந்தை கியான் சந்திர பஞ்சாபி, இந்திய-பாக்கிஸ்தான் பிரிவினையின்போது பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாபில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். தற்போதைய அயோத்தி மாவட்டத்தில் உள்ள பைசாபாத்தில் குடியேறினார்.
அவருக்கு தன்னிபூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலத்தை 5 ஆண்டு காலத்துக்கு அரசு துறை ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலும் அவர் அதை வைத்திருந்தார். அதன்பின், வருவாய்த்துறை ஆவணங்களில் என் தந்தை பெயர் சேர்க்கப்பட்டது.
ஆனால், அந்த மனுவை பரிசீலிக்காமல், எங்கள் 28 ஏக்கர் நிலத்தில் இருந்து 5 ஏக்கரை மசூதி கட்ட ஒதுக்கி உள்ளனர். தீர்வுகள் பிரிவு அதிகாரி தீர்வு காணும்வரை, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்ற தடை விதிக்க வேண்டும்.