தனித்து போட்டியா? அல்லது கூட்டணியா? இன்று கமல்ஹாசன் முடிவு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூட்டணி குறித்து இன்று முடிவெடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 


நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். திமுக மற்றும் அதிமுகவோடு கூட்டணி இல்லை என உறுதியாகக் கூறிவிட்ட நிலையில், வேறு எந்தவொரு கட்சியோடும் கூட்டணி அமைக்கவில்லை.

இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபடும் கமல் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணி அமைத்து போட்டியா என்பதை அறிவிக்க உள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here