ஐ.ஐ.டி.யின் ஆய்வில் கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் சுவாச நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் வைரஸ் தாங்கிகளாகவும், தொற்று பரப்பும் சாதனங்களாகவும் இருக்கின்றன. இந்த நீர்த்துளிகள் பேப்பர், துணி போன்றவற்றில் பட்டவுடன் விரைவில் உலர்ந்து விடுகின்றன.
அந்தவகையில் பேப்பர் , துணியில் முறையே 3 மணி நேரம் , 2 நாட்கள் மட்டுமே வைரஸ் உயிர்வாழ்கிறது. ஆனால் கண்ணாடியில் 4 நாட்கள் வரையும், பிளாஸ்டிக், ஸ்டீல் மேற்பரப்பில் 7 நாட்கள் வரையும் வைரஸ் உயிர்வாழ்வதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
இதன் மூலம் அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் போன்ற இடங்களில் கண்ணாடி, ஸ்டீல், பிளாஸ்டிக், மரத்தினால் ஆன பொருட்களைத் துணியால் மூடி வைக்குமாறு ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் அச்சுறுத்தல் குறையும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.