அனைத்துலக விமான பயணயங்களுக்க்கான புதிய வழிகாட்டு விதிமுறைகள்

புதுடில்லி:
பிரிட்டன், தென்னாப்ரிக்கா, பிரேசிலில் கொரோனா உருமாற்றம் காரணமாக, சர்வதேச விமான பயணியருக்கு, புதிய வழிகாட்டு விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று அறிக்கை வெள்ளிய்யிட்டிர்ருக்க்கிறது.
சர்வதேச விமானங்களில் வரும் பயணியர், டில்லி விமான நிலைய, ‘ஆன்லைன்’ முகவரியில், கொரோனா பாதிப்பு இல்லை என, சான்றை பதிவேற்ற வேண்டும்.
பரிசோதனையை, 72 மணி நேரத்திற்குமுன் நடத்தியிருக்க வேண்டும். பிரிட்டன், தென்னாப்ரிக்கா பிரேசில் வழியாக இயக்கப்படும் விமானங்களில்,அந்நாட்டின் பயணியரை தனியாக அமர்த்த வேண்டும்.இந்நாடுகளின் பயணியருக்கு பரிசோதனை கட்டாயம் என்பதால், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் முன், அவர்கள் அதற்கு உட்பட வேண்டும்.  
பாதிப்பு இல்லை என, முடிவுகள் வந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.கொரோனா உறுதியானால், சிகிச்சை அளிக்கப்படும்.இன்று நள்ளிரவு முதல் அமலாகும் புதிய விதிமுறைகள், அடுத்த அறிவிப்பு வரை தொடரும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here