பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 5) 2,154 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 310,097 ஆக உள்ளது. சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான 749 சம்பவங்களும் ஜோகூரில் 463 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
ஒரு அறிக்கையில், சுகாதார அமைச்சகம் அதே 24மணி நேரத்திற்குள், ஆறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இறப்பு எண்ணிக்கை 1,159 ஆக உள்ளது.
மேலும் 3,275 நோயாளிகள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதாவது 286,904 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தத்தில் நாடு முழுவதும் 22,034 செயலில் உள்ள சம்பவங்கள் உள்ளன.
இந்த எண்ணிக்கையிலிருந்து, 184 தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளன. 87 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.