மலாக்கா: வறண்டு மழை இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு திடீர் வெள்ளம் மலாக்காவை தாக்கியுள்ளது.
சனிக்கிழமை மாலை (மார்ச் 6) பிற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஐந்து பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சிவில் பாதுகாப்பு படை அதிகாரி அவாங் போஹாரி அவாங் அஹெட் தெரிவித்தார்.
பெங்கலான் ராமா பந்தாய், தாமான் மெர்டேகா, தாமான் ஸ்ரீ க்ருபோங், தாமான் க்ருபோங் ஜெயா மற்றும் கம்போங் தம்போய் ஆகிய பகுதிகள் அவை. எவ்வாறாயினும், அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகிறார்கள் என்று அவாங் போஹாரி கூறினார். தற்பொழுதைய நிலவரப்படி பல கார்கள் வெள்ளநீரில் மூழ்கியிருந்தன.