– 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், அங்குள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காண்டிபோரா பிஜ்பேஹரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களது உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. அங்கு பதுங்கியிருக்கும் மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டனர்