– பங்கேற்ற 11 பேர் கைது
இலங்கை:
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, சட்டவிரோத போதைப்பொருள்களைப் பயன்படுத்தி பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி –
அனிவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த களியாட்டத்தில், கண்டியைச் சேர்ந்த வர்த்தகர்களின் பிள்ளைகளே கைது செய்யப்பட்டுள்ளதோடு, 21 வயதுக்குக் குறைவான இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருள்களைப் பயன்படுத்தியிருந்ததாகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த நபரே இந்த பேஸ்புக் களியாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாகவும், இதில் கிரிபத்கொட, மீரிகம, ஜா-எல, கடவத்த ஆகியப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.