-காரணம் -தடுப்பூசி தட்டுப்பாடு
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் அந்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியும் பிரேசிலில் போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பிரேசிலுக்கு தடுப்பூசிகளைப் பெறுவதில் வெளியுறவுத்துறை மந்திரி எர்னஸ்டோ அராஜோ ராஜாங்க முறையில் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
வெளியுறவுத்துறை மந்திரி எர்னஸ்டோ அரோஜோ, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புடன் நெருக்கமான நட்புறவு ,சீனாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது ஆகிய காரணங்களால் பிரேசில் போதிய அளவு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பொறுப்பேற்று பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பை எர்னஸ்டோ அரோஜா ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், ராஜினாமா குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.