அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் – ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று முதல் 3 வாரங்கள் வரை 90 சதவீதம் பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியுடையவர்கள் என அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உள்ளதால் ஏப்ரல் 19-ம் தேதிக்குள் அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரியவர்களில் 90% பேர் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என தெரிவித்தார்.