Home உலகம் நீடித்த சமிக்ஞை கோளாறு

நீடித்த சமிக்ஞை கோளாறு

காலையில் 5 மணி நேரம் நீடித்தது

ராஃபிள்ஸ் பிளேஸ் நிலை­யத்­திற்­கும் பீஷான் நிலை­யத்­திற்­கும் செல்ல 45 நிமி­டங்­கள் தாம­த­மா­கும் என்று நேற்­றுக் காலை 7.30 மணிக்கு எஸ்­எம்­ஆர்டி நிறு­வ­னம் தனது டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது.

நியூட்­டன் நிலை­யத்­திற்­கும் சிட்டி­ஹால் நிலை­யத்­திற்­கும் இடை­யில் கோளாறு ஏற்­பட்­டது. அதி­காலை 5.47 மணிக்கு அது பற்றி டுவிட்­ட­ரில் எஸ்­எம்­ஆர்டி தெரி­வித்­தது.

இல­வச இடை­வ­ழிப் பேருந்து சேவை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப் பட்டது. சமிக்ஞை முறை­யில் மென்­பொ­ருள் பிரச்­சினை கார­ண­மாக கோளாறு ஏற்­பட்­டது என்பது முதற்­கட்ட புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­த­தாக நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் அறிக்கை ஒன்­றில் குறிப்­பிட்­டது.

அந்த சமிக்ஞை முறையை அமைத்த ‘தால்ஸ்’ என்ற நிறு­வ­னம் கோளாறைச் சரிப்­ப­டுத்­தி­ய­தாக எஸ்­எம்­ஆர்டி பிறகு தெரி­வித்­தது.

காலை சுமார் 10 மணிக்கு சமிக்ஞை முறை சரிப்­ப­டுத்­தப்­பட்ட பிறகு சுமார் 10 நிமிட நேரத்­துக்கு தோ பாயோ­வுக்­கும் மரினா சவுத் பிய­ருக்­கும் இடை­யில் ரயில் சேவை இல்லை.

காலை உச்­ச­நே­ரத்­தில் ரயில்­களை இயங்­கு­மாறு செய்து பிறகு தொழில்­நுட்ப கோளா­று­க­ளைச் சரி­செய்­து­கொள்ள தான் விரும்­பி­ய­தா­க­வும் எஸ்­எம்­ஆர்டி கூறி­யது.

குறை­பா­டு­கள் காலை 10.10 மணிக்குச் சரி­செய்­யப்­பட்­டு­விட்­ட­தா­க­வும் ரயில் சேவை­கள் மீண்­டும் வழக்­க­நி­லைக்­குத் திரும்­பி­விட்­ட­தா­க­வும் முற்­ப­கல் 11.30க்கு எஸ்எம்­ஆர்டி கூறி­யது.

இத­னி­டையே, கத்­திப் நிலையத்­தில் காலை 7.30 மணிக்கு ரயி­லில் ஏறிய அர்­ஜுன் நாயர், 26, என்ற பாது­காப்­புத் துறை அதி­காரி, அங் மோ கியோ நிலை­யத்­தில் 10 நிமி­டம் தாம­த­மா­கத் தரை­யி­றங்­கி­னார்.

நடை­மே­டை­யில் பய­ணி­கள் நிரம்பி இருந்­த­தாக அவர் கூறி­னார். தோ பாயோ செல்­வ­தற்கு வழக்­க­மான நேரத்­தை­விட 30 நிமி­டங்­கள் அதிக நேரம் ஆகி­யது என்­றும் நொவி­னா­வில் தான் தரை­யி­றங்­கி­ய­போது நடைமேடையில் குழப்பமான நிலை காணப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

“இல­வச பேருந்­து­களும் இல்­லா­மல் போன­தால் கூட்­டம் அதி­க­மாக இருந்­தது. டாக்­சி­க­ளுக்­கும் வாட­கைக் கார்­க­ளுக்­கும் அதி­கம் பேர் காத்­தி­ருந்­த­னர்,” என்றாரவர்.

திரு நாயர் வழக்­க­மான பேருந்து சேவை­கள் மூலம் பூகிஸ் சென்­றார். அங்­கி­ருந்து வாட­கை கார் மூலம் தஞ்­சோங் பகார் செல்ல இருந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

நேற்­றைய சேவை தடை­யை­யும் சேர்த்து இரண்டு நாட்­களில் மொத்­தம் இரண்டு தடவை சமிக்ஞை முறை கோளா­று­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன.

எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் நிர்­வ­கித்து நடத்­தும் வட­கி­ழக்கு ரயில் வழித்­த­டத்­தில் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை­யில் மின்­சாரக் கோளாறு கார­ண­மாக ஏறத்­தாழ 3 மணி நேம் சேவை பாதிக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, பய­ணி­க­ளுக்கு ஏற்­பட்ட சங்­க­டங்­க­ளுக்­காக மன்னிப்பு கேட்­டுக்­கொண்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், இத்­த­கைய இடை­யூ­று­கள் ஏற்­படும்போது அதற்­கான மூல கார­ணங்­களை கண்­டு­பி­டிக்­கும் முயற்­சி­களை மேற்­கொண்டு மறு­ப­டி­யும் அவை ஏற்­படா­மல் இருக்க உறு­தி­யான நட­வடிக்­கை­களை தொடர்ந்து எடுத்து வரப்­போ­வ­தாக அறி­வித்­தது.

ரயில் சேவை­யின் நம்­ப­கத்­தன்­மையை நிலை­நாட்டி வரு­வது என்­பது தொடர்ந்து இடம்­பெற்று வரும் ஒரு பணி என்றும் போக்குவரத்து ஆணை­யம் சுட்­டி­க்காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here