கண்ணீர் விட்டு கதறி அழுத பாக்கியலட்சுமி

 -என்ன நடந்தது?

கொரோனா ஊரடங்கிற்கு முன்பே ஆரம்பித்த சீரியல் ‘பாக்கியலட்சுமி’. கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகள் உடன் ஒரு குடும்பத்தலைவி எப்படி ஒரு குடும்பத்தை சமாளிக்கிறார் என்பது பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி.

எனவே குடும்ப தலைவிகள் பலருக்கும் இது பேவரைட் சீரியலாக மாறிப்போனது.

அதுவும் முக்கியமாக குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒருகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை என்று நினைக்கும் பாக்கியலட்சுமி எப்படி தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்கிறார் என்பதுதான் கதையின் திருப்பம்.

இதை பார்த்த பலரும் தங்களுக்கு இந்த சீரியல் ஒரு உந்துதலாக இருப்பதாகவும் பாசிட்டிவிட்டியை உருவாக்குவதாகும் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக இரண்டாவது மகன் எழில் தான் பங்கேற்ற ஒரு போட்டியில் விருது வெல்வாரா என்பது தான் சுவாரஸ்யமாக சென்றது.

சமூக வலைthதளங்களில் கூட இதைப் பற்றிய பதிவுகளை காண முடிந்தது. இந்நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் விஷால் சமீபத்தில் லைவ் வந்துள்ளார்.

ரசிகர்கள் தனக்கு தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அவர் பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீர் விசிட் அடிக்க அம்மா கேரக்டரில் நடிக்கும் சுசித்ரா உடனே தத்ரூபமாக அழுத காட்டியது அவர் கதாபாத்திரத்தை எவ்வளவு ஊன்றி இருக்கிறார் என்பதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here