Home உலகம் வசிப்பிடங்களைவிட்டு 12,000 பேர் வெளியேற்றம்

வசிப்பிடங்களைவிட்டு 12,000 பேர் வெளியேற்றம்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான மியன்மாரின் பாகானில் நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து சென்றனர். 

யங்­கூன்:

மியன்­மார் ராணு­வம் அதி­க­ள­வில் படை­களை நிறுத்­தி ­உள்­ள­தா­க­வும் அவர்­க­ளின் தொடர் விமா­னத் தாக்­கு­தல்­க­ளால் குழந்­தை­கள் உட்­பட 12,000க்கும் மேற்­பட்ட அப்­பாவி மக்­கள் தங்­கள் வசிப்­பி­டங்­க­ளை­விட்டு விட்டு வேறு இடங்­க­ளுக்கு குடி­பெ­யர நேர்ந்­த­தாகவும் கிளர்ச்­சிக் குழு குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

கேஎன்யூ எனும் கேரன் இன கிளர்ச்­சிக் குழு 10 ராணுவ அதி­கா­ரி­க­ளைக் கொன்று கிழக்கு கெய்ன் மாநி­லத்­தில் உள்ள ராணு­வத் தளம் ஒன்றை கைப்­பற்­றி­யது. அதற்கு ராணுவ ஆட்­சிக்­கு­ழு­வும் பதி­லடி கொடுத்­தது.

அதி­க­ள­வில் படை பலத்­தைப் பயன்­ப­டுத்தி மார்ச் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தொடர் குண்­டு­வீச்சு மற்­றும் விமா­னத் தாக்­கு­தல்­களில் ஈடு­பட்ட மியன்­மார் ராணு­வத்­திற்கு எதி­ராக கேரன் கிளர்ச்சிக் குழு நேற்று கண்­ட­னம் தெரி­வித்­தது.

 

இந்த தாக்­கு­தல்­களில் சிறார்­கள் உட்­பட பலர் மாண்­ட­னர். ஆனால், ராணுவத் தளத்தை கைப்­பற்­ற­வும் அதி­கா­ரி­களை கொலை செய்­ய­வும் கார­ண­மாக இருந்த கேஎன்­யூ­வின் 5வது படைப்­பி­ரிவை மட்­டுமே ராணு­வம் குறி­வைத்து வரு­வ­தாக ஆட்­சிக்­கு­ழு­வின் செய்­தித் தொடர்­பா­ளர் சாவ் மின் துன் தெரி­வித்­தார்.

மேலும் ஒருநாள் மட்டுமே ராணுவப் படை தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர் சொன்னார்.

கடந்த திங்கட்கிழமையன்று எல்லை கிராமங்களில் வசித்த சுமார் 3,000 பேர் அடைக்கலம் தேடி தாய்லாந்திற்குள் நுழைந்ததாகவும் ஆனால் பெரும்பாலானோர் புதன்கிழமையன்று மீண்டும் மியன்மாருக்கே திரும்பியதாகவும் தாய்லாந்து கூறியது.

இதற்­கி­டையே, ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக பாது­காப்புப் படை­யி­னர் நடத்­திய வெவ்­வேறு துப்­பாக்­கிச் சூட்டு சம்­ப­வங்­களில் நேற்று நால்வர் கொல்­லப்­பட்­ட­தாக ஊடகச் செய்­தி­கள் கூறு­கின்­றன.

ராணு­வம் ஆட்­சி­யைக் கைப்­பற்றி இரண்டு மாதங்­கள் ஆன நிலை­யில், இது­வரை சுமார் 46 சிறார்­கள் உட்­பட 550 பேர் கொல்­லப்­பட்­ட­னர். இருப்­பி­னும் மக்­கள் தங்­கள் எதிர்ப்பை தெரி­விக்க சிறிய நக­ரங்­களில் சிறு சிறு குழுக்­க­ளாக கூடு­வதை நிறுத்­த­வில்லை.

இந்­நி­லை­யில், மத்­திய நக­ர­மான மோனி­வா­வில் பாது­காப்­புப் படை­யி­னர் கூட்­டத்­தின் மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­தா­க­வும் அதில் மூன்று பேர் கொல்­லப்­பட்­ட­தா­க­வும் மியன்­மார் நவ் செய்தி கூறு­கிறது.

இதே போல் தெற்கு நகரமான தாட்டனில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகோ வீக்லி இணையச் செய்தி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here