கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்தரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லாரிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று கொள்ளிடத்தில் உள்ள ஒரு கடைக்கு விற்பனைக்காக வந்த கத்தரிக்காய் வித்தியாசமாக இருந்தது. அதாவது ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய்கள் இருந்தன.
இந்த கத்தரிக்காய் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அந்த கத்தரிக்காய்யை கடையில் காட்சி பொருளாக வைத்துள்ளனர். மேலும் அந்த கத்தரிக்காய்யை காய்கறி வாங்க வரும் அனைத்து பொதுமக்களும் அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.
ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் இருப்பதால் இது அதிசயமானது என்றும், சிவனுக்கு மூன்று கண்கள் இருப்பது போல் கத்தரிக்காயும் மூன்றாக இருப்பதால் அதிர்ஷ்டமானது என்று கூறி வருகின்றனர்.