– அதிபர் ரூவன் ரிவ்லின் அழைப்பு
இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுவரை இல்லாத வகையில், இரண்டே ஆண்டுகளில் நான்காவது முறையாக கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றத் தோதலுக்குப் பிறகு இந்த அழைப்பை அவா் விடுத்துள்ளாா்.
இந்தத் தோதலிலும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எந்தக் கூட்டணிக்கும் இல்லை என்றாலும், பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சியின் தலைவா் என்ற முறையில் நெதன்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.









