எல்லையைத் திறக்குமுன் நல்லா யோசிங்க!

டெல்டா வகை மாறுபாட்டால்.. தகவல் வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி..!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸின் மாறுபாடு தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், டெல்டா வகை கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவலை தடுப்பதற்கு இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகளை கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். ஆனால் இவருடைய இந்தக் கூற்று நியாயமற்றது என்று இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான மேக்ரான் கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத பிற நாடுகளுக்கு எல்லையை திறப்பதிலும், தடுப்பூசிகளை வழங்குவதிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சேர்ந்து ஒரே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றுள்ளார். 

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸின் மாறுபாடு குறித்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here