தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரம்ஜான் நோன்பு!

-தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை (14.04.21) தொடங்கும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பிறை தெரிய தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருப்பது வழக்கம். அதற்கான அறிவிப்பு அரசு தலைமை காஜியால் வெளியிடப்படும். அதனைப் பின்பற்றி இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தின் அரசு காஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 12 ஆம் தேதி மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. அதனால் ஏப்ரல் 14ஆம் தேதி ரமலான் மாத முதல் பிறை என்பது ஷரியத் முறையில் நிர்ணயிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே அரசு தலைமை காஜி அறிவிப்பின்படி ரம்ஜான் நோன்பு தொழுகை நாளை தொடங்குகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here