–அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
தமிழ் புத்தாண்டு சித்திரை 1 (இன்று) கொண்டாடப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகத்தினர் அவர்களது மொழிகளின் தங்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றார்கள்.
இந்தியா மட்டுமின்றி தெற்கு , தென்கிழக்கு ஆசியாவில் பலதரப்பட்ட சமூகம் மக்கள் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு, தென்கிழக்கு ஆசியாவின் புத்தாண்டு கொண்டாடும் தமிழ், கேரளா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன், வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கும் நானும் ஜுல்லும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, தமிழ், தாய், விஷூ புத்தாண்டு வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.