கத்திக் குத்துகளுடன் இறந்து தாய்

கொலையா ! தற்கொலையா?

ஈப்போ–
இங்குள்ள உலுகிந்தா தாமான் பெர்பாடுவானில் தனித்து வாழும் தாயான கிருஷ்ணா கருணாநிதி (வயது 31) என்பவர் கத்திக்குத்துக் காயங்களுடன் அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இவருடன் ஓர் ஆடவரும் கத்திக்குத்து காயங்களுடன் மயங்கிக் கிடந்தார் என்று பேராக் மாநில போலீஸ் கடுங்குற்றவியல் பிரிவு இலாகா இயக்குநர் எஸ்ஏசி அன்வார் ஒஸ்மான் கூறினார்.

அண்டை வீட்டார்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த வீட்டை போலீஸ்படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவ்வேளையில் இவ்விருவரும் கத்திக்குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர் என்று குறிப்பிட்டார்.

முதல்கட்ட பரிசோதனையில் இவர்கள் இருவரின் உடலிலும் கூர்மையான ஆயுதங்களால் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. சம்பவம் நடந்த இடத்திலேயே அந்த மாது இறந்து விட்டார். ஆனால், அந்த 23 வயது இந்திய ஆடவர் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததாக அவர் சொன்னார்.

சம்பவம் நடந்த இடத்தில் கத்தி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கத்தி இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த ஆடவரின் உடலில் ஏற்பட்ட கத்திக்குத்து காயங்கள் மற்றவர்களால் ஏற்பட்டதா அல்லது தற்கொலை முயற்சியில் அந்த ஆடவரே குத்திக்கொண்டாரா என்று போலீஸ் விசாரணை செய்து வருவதாக அன்வார் கூறினார்.

இந்த ஆடவர் அடிக்கடி இந்தப் பெண்ணை தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் இவ்விவகாரம் குறித்து கடந்த மார்ச் மாதம் போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர் இந்து வீட்டினுள் திடீரென புகுந்து இம்மாதிரியான தொந்தரவுகள் செய்துள்ளது தெரிய அறிய வருவதாக அவர் கூறினார்.
பலத்த காயங்களுக்கு ஆளான அந்த ஆடவர் ஈப்போ ராஜா பெர்மாய்சூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர். இந்த மாதின்ன் இரு சிறிய பையன்களும் சாட்சிக்கு அழைக்கப்படுவர். இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்திருக்ககூடும் என்று போலீஸ் தரப்பினர் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இரு பிள்ளைகளுக்குத் தாயான கிருஷ்ணா இங்குள்ள பாசீர் பூத்தே முதியோர் காப்பகத்தில் பணியாளராக வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஆர். கிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here