ஜோகூர் பாருவில் காதல் மோசடியில் சிக்கிய 40 வயதுடைய பெண் ஒருவர் 140,000 வெள்ளிக்கும் மேல் ஏமாற்றப்பட்டார்.
ஒரு கற்றல் நிறுவனத்தில் பணிபுரிந்த பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கடந்த மார்ச் மாதம் தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது என்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர், ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
“மெசஞ்சர் செயலி மூலம் அவருக்கு குறித்த செய்தி அனுப்பப்பட்டது, மேலும் பாதிக்கப்பட்டவரைத் தெரிந்துகொள்ள விரும்புவதாக சந்தேக நபர் அதில் கூறினார்.
“அந்தப் பெண் சந்தேக நபருடன் பிறகு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார்,” என்று அவர் இன்று (ஜூலை 18) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர், மறைந்த தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற தான் மலேசியாவிற்கு வருவதாக பாதிக்கப்பட்ட நபரிடம் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நிதி உதவி கோரினார்.
மேலும் “சந்தேக நபர் தனது செலவினங்களுக்காகவும், உலக வங்கியில் இருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM24 மில்லியன்) திரும்பப் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்துமாறும், பணத்தைப் பெற உதவுவதற்காக பாதிக்கப்பட்டவர் அதில் பெரும் பகுதியைப் பெறுவார் என்றும் சந்தேக நபர் உறுதியளித்தார்,” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் ஏப்ரல் 11 மற்றும் ஜூன் 12 க்கு இடையில் 11 நிதி பரிவர்த்தனைகளை சந்தேக நபர் கொடுத்த கணக்கிற்கு பரிமாற்றம் செய்தார், ஆற்றின் மொத்த தொகை RM142,080 ஆகும் என்றும், இவ்வழக்கு மோசடி குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.