ஜோகூர் பாரு: கங்கார் புலாய், தாமான் டெரட்டாயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனக்கு தானே தீ வைத்துக் கொள்ள முயன்ற ஒரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இரு தினங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்கந்தர் புத்ரி ஒ.சி.பி.டி உதவி ஆணையர் துல்காஹிரி முக்தார் தெரிவித்தார்.
ஒரு பெட்ரோல் நிலைய ஊழியரின் கூற்றுப்படி, 30 வயதான பெண் 5 வெள்ளிக்குவ் பெட்ரோலை வாங்கி அதை தன் மீது ஊற்றி தீவைத்து கொண்டார். பின்னர் தொழிலாளி தீயை அணைக்கும் கருவியுடன் வெளியே சென்றார்.
பாதிக்கப்பட்ட மகளின் 60 வயதான தாய் தனது மகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த நவம்பர் முதல் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசாரிடம் தெரிவித்ததாக ஏ.சி.பி.துல்காஹிரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் ஜோகூர் பாருவில் தனியாக இருக்கிறார். ஏனெனில் அவரது பெற்றோர் இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் முகம், மார்பு, வயிறு மற்றும் முதுகில் தீக்காயங்கள் ஏற்பட்டு சுல்தானா அமினா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உதவி தேவைப்படுபவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள Befrienders சேவையை தொடர்பு கொள்ளலாம். எண்களின் முழு பட்டியல் மற்றும் இயக்க நேரங்களுக்கு,www.befrienders.org.my/centre-in-malaysia க்குச் செல்லவும் அல்லது 03-7627 2929 ஐ அழைக்கவும்.