‘சீனா வைரஸ்’ என்று கூறியதற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்கு

ஆசிய-அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவித்ததாகக் கூறி சீன அமெரிக்க சிவில் உரிமைகள் கூட்டணி கோவிட் -19 ஐ ‘சீனா வைரஸ்’ என்று கூறியதற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்’, ‘வுஹான் வைரஸ்’ மற்றும் ‘குங் ஃப்ளூ’ என்று ட்ரம்ப் பலமுறை குறிப்பிடுவதாக சீன அமெரிக்க சிவில் உரிமைகள் கூட்டணி (CACRC) தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ‘தீவிரமான மற்றும் மூர்க்கத்தனமான’ இத்தகைய நடத்தை சீன அமெரிக்கர்களுக்கு உணர்ச்சிகரமான துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நியூயார்க்கின் தென் மாவட்டத்திற்காக அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில்  அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டி.எம்.இசட் நிறுவனத்தால் முதலில் பெறப்பட்ட இந்த வழக்கு, கோவிட் -19 இன் தோற்றம் இன்னும் தெளிவாக இல்லை என்றும், அவதூறான கருத்துக்களை கூறும்போது குறிப்பாக சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து வரும் சொற்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இது டொனால்ட் டிரம்பிற்கும் தெரியும் என்றும் அது கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here