தன்மொழி சிறப்பென செய்த பன்மொழியாளர்
பன்மொழிப்புலவர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24- ஆம் தேதி பிறந்தார்.
இவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள் ஆகியவை தலையானவையாகக் கருதப்படுகின்றன.
தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியல் பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.
1989-ஆம் வரும் மே மாதம் இதே நாளில் மரணமடைந்தார்.