– 90 நாட்களில் விவரம் தேவை–
ஜோ பைடன் அதிரடி உத்தரவு!
முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச் சந்தையில் இருந்து பரவியதாகக் கூறப்பட்டது.
பின்னர் வூகான் ஆய்வுக்கூடத்தில் (வைராலஜி நிறுவனம்) இருந்து கசிய விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக அமெரிக்க முந்தைய ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி அதிர வைத்தார்.
கொரோனா தோன்றியது எங்கே என்பது பற்றி ஆதாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதையடுத்து, கொரோனாவின் தோற்றம் எங்கே என்பதை உறுதியாகக் கண்டறிவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார்.
மேலும், இது தொடர்பாக உளவு அமைப்புகளுக்கு அவர் 90 நாட்கள் கெடுவையும் விதித்துள்ளார்.
ஜோ பைடனின் இந்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கை உலுக்குவதாக அமைந்துள்ளது.