இந்தோனேசியாவின் டெர்னேட் பகுதியிலிருந்து 200 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் (மே 29) பயணித்த கப்பலில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவல் ஏற்பட்ட அடுத்த சில நொடிகளிலேயே ,அப்பயணிகள் கப்பலில் இருந்த பணியாளர்கள் பயணிகள் அனைவருக்கும் லைப் ஜாக்கெட்டுக்களை அணிய வைத்து, கடலுக்குள் குதிக்க வைத்து பின்னர் படகில் ஏற்றி காப்பாற்றியுள்ளனர். இக்கப்பலின் பணிக்குழு மிக சாதூரியமாக செயற்பட்டு அனைவரினதும் பாராட்டினையும் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தீப்பிடித்து எரிந்த பயணிகள் கப்பலில் மீட்பு பணி துரிதமாக நடந்து, இதுவரை 217 மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும் ஒருவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.