உலக புகையிலை எதிர்ப்பு நாள்: மே 31- 1987
உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் ஒவ்வோராண்டும் மே 31-ஆம் நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புகையிலை வணிகம் சூடுபிடித்திருந்த காலம் ஒன்று இருந்தது .ஆனால் இன்றைய நிலையில் புகையிலை மனித உயிருக்கு மிரட்டல் தருகின்ற பொருள் என்று உணரப்பட்ருப்பாதால் அதன் பாதிப்பிலிருந்து விலகும் பொருட்டு புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987- ஆம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
ஆனாலும் பழக்கத்திற்கு அடிமையானதால் இன்னும் புகையிலை பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாய் பல கோடிபேர் இருக்கிறார்கள். புகையிலை உற்பத்தியைத்தடுத்தால் வேறொன்று முளைக்கிறது.
இன்றைய இலையர்களை வேப் (WAPE) எனும் நாகரீக புகை ஆட்கொண்டிருக்கிறது. இதற்கும் உலக சுகாதார நிறுவனம் ஏதாவது செய்ய முடியுமா?
யார் எதைச்செய்தாலும் மனிதனாக திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது. பல வேளைகளில் சட்டம் தோற்றுப்போய் தலை கவிழ்ந்திருக்கிறது.