இஸ்ரேல் (ஜூன் 16): காசா பகுதியில் உள்ள ஹமாஸ் ஆயுததாரிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காசாவிலிருந்து தீயுடன் கூடிய பலூன்களை நேற்று (ஜூன் 15) இஸ்ரேல் பகுதிக்கு வந்ததை தொடர்ந்து, இஸ்ரேல் வான்வழித்தாக்குதலை நடத்தியதாக கூறியது.
கடந்த மே 21 ஆம் திகதி இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த தாக்குதலில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் எதுவும் தெரியவில்லை. மேலும் இதுவரை நடந்த தாக்குதலில் நேற்று நடந்த தாக்குதலே மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகின்றது.