‘தேச பந்து’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார்.
‘தேச பந்து’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ், 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர்.
சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன்தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று ஐசிஎஸ் தேர்வு எழுதினார். பின்னர் இந்தியா திரும்பி கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்தார்.
வங்கப் பிரிவினையின் போது அரவிந்தர், பிபின் சந்திரபாலுடன் இணைந்து ‘வந்தே மாதரம்’ என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.
1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார். அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார்.
இவர் சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.
1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதேநாளில் டார்ஜிலிங்கில் தனது 55-வது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டு வரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண் அனுதாபம் தெரிவித்தனர்.