கொழும்பு (ஜூன் 17) : இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அதி வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் அதிகாரி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளதுடன் கடந்த முறை அடையாளம் காணப்பட்ட B117 வைரஸ் பிரிவை விடவும், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள B.1.617.2 என்ற வைரஸ் 50 வீதம் வீரியம் கொண்டது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவிட் தடுப்பூசியின் ஒரு மருந்தளவு (DOSE) பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.