300 கிலோ எடை கொண்ட மாதுவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற தீயணைப்பு படை உதவியது

ஜித்ரா மருத்துவமனையிலிருந்து சுமார் 300 கிலோ எடையுள்ள ஒரு பருமனான பெண்ணை நேற்றிரவு அலோர் செடார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற தீயணைப்பு படை உதவியது.

இரவு 9.52 மணிக்கு தங்களுக்கு  உதவுமாறு மருத்துவமனையில் இருந்து தங்கள் துறைக்கு அழைப்பு வந்ததாக  கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் முகமதுல் எஹ்சன் முகமட் ஜெய்ன் தெரிவித்தார்.

ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து (பிபிபி) ஒரு குழு இரவு 9.56 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று  42 வயதுடைய பெண்ணை ஒரு இசுசு லோரி கொண்டு வெளியேற்றியது. நோயாளியுடன் பிபிபி ஜித்ராவின் நான்கு உறுப்பினர்களுடன் சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) ஒரு ஊழியரும் இருந்தார் என்று தகவல் வழி தெரிய வந்துள்ளது.  இரவு 11.14 மணிக்கு இப்பணி முடிந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here