அமெரிக்காவில் ஜோ பைடன் பரிந்துரை
தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை படிபடிப்படியாக நிறைவேற்றி வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். சொல்வதைச் செய்வதுதான் அரசுக்குஅழகு என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் அவர், வாக்குறுதிகளை காலமறிந்து நிறவேற்றி வரும் வரிசையில் அடுத்து ஓர் இந்தியப் பெண் நீதிபதிக்கு முன் மொழியப்பட்டிருக்கிறார்.
இந்த பரிந்துரையை செனட் சபை ஏற்று அங்கீகரித்தால், கனெக்டிகட் மாகாணத்தில், கனெக்டிகட் மாவட்ட நீதிபதி பதவியில் தெற்காசியாவை சேர்ந்த ஒருவர் அமர்வது இதுவே முதல் முறை ஆகும்.
செனட் சபையில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் தலா 50 இடங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையை தீர்மானிக்க துணை ஜனாதிபதி, ஓட்டு போட முடியும். எனவே 51 வாக்குகளுடன் சரளா வித்யா நாகலாவின் நியமனம் செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2010-12 காலகட்டத்தில் சான்பிரான்சிஸ்கோவில் முங்கர் டோல்ஸ் அண்ட் ஓல்சனில் பணியாற்றி உள்ளார்.
இவர் 2008-09 கால கட்டத்தில் 9- ஆவது அப்பீல் கோர்ட்டு நீதிபதி சூசன் கிராபரின் சட்ட எழுத்தாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.