ஷா ஆலம்: கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் இஎம்சிஓ அமல்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் அனைத்து கட்டுமான மற்றும் தொடர்புடைய பணிகளும் நிறுத்தப்பட வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார். இருப்பினும், பராமரிப்பு,பழுது மற்றும் சிக்கலான வயரிங் பணிகள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
இதன் பொருள் அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் (மிட்டி) அனுமதி கடிதம், இஎம்சிஓ காலத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடர பயன்படுத்த முடியாது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.