சிம்பாங் அம்பாட் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ; 60% பொருட்கள் அழிந்தன

நிபொங் திபால்:  சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (ஜூலை 7) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 60% பொருட்கள் அழிந்தது. அதிர்ஷ்டவசமாக, உயிர் சேதங்கள் எதுவும் இல்லை.

அதிகாலை 3.55 மணிக்கு தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு வந்தபோது, தீ ஒரு வகுப்பு பி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி ஆலையில் பரவி வந்ததது கண்டுபிடிக்கப்பட்டது. தீ மொத்த அழிவின் மதிப்பிடப்பட்ட சதவீதம் சுமார் 60% ஆகும்.

அதிகாலை 4.35 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அணைக்கும் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. சுங்கை பகாப் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவுக்கு பட்டு கவான், நிபோங் திபால் மற்றும் பாயன் பாரு தன்னார்வ தீயணைப்பு குழுவினர் உதவினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here