பெட்டாலிங் ஜெயா:
பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோருக்கு எதிராக முகநூலில் குற்றவியல் மிரட்டல் விடுத்த தாக சந்தேகத்தின் பேரில் இரண்டு உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் ஷுஹைலி ஜைன் கூறுகையில், “Nekad Hikers Ventures” என்ற பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் என நம்பப்படும் 51 வயதுடைய முதல் சந்தேக நபர் சிலாங்கூர் பந்தர் பாரு பாங்கியில் கைது செய்யப்பட்டார்.
பினாங்கில் உள்ள புக்கிட் மெர்தாஜாமில் இரண்டாவது சந்தேக நபர், 27 வயது டையவர், ‘Jgad Zruu’ என்ற பேஸ்புக் கணக்கின் உரிமையாளர் என நம்பப்படுகிறது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 507 இன் கீழ், அநாமதேய தகவல்தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் Multimedia Act பிரிவு 223 இன் கீழ், தீங்கு விளைவிக்கும் எதையும் அனுப்ப நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக வழக்குகள் விசாரிக்கப்படுவதாக ஷுஹைலி கூறினார்.
“இந்த வழக்கு இன்னும் விசாரணை கட்டத்தில் உள்ளது. விசாரணையை பாதிக்கும் வகையில் ஊகங்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.