எவர்கிரின்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டது.
அதற்காக ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 ஆயிரத்து 836 கோடி) இழப்பீடாக சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டது. எனினும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 ஆயிரத்து 108 கோடி) வரை சூயஸ் கால்வாய் ஆணையம் குறைத்து கொண்டது.
இந்த நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டு தொகையை வழங்க ‘எவர்கிரின்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்பு கொண்டார். இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.
இதனை தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு ‘எவர்கிரின்’ கப்பலை சூயஸ் கால்வாய் ஆணையம் நேற்று விடுவித்தது. இதையடுத்து அந்த கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.