எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு!
மியாமி கட்டிட விபத்தின் இடிபாடுகளில் சிக்கிய 50 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25- ஆம் தேதி இடிந்து விழுந்தது.
12 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அப்பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. 150க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றன.
இந்நிலையில், மியாமியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியுள்ள உடல்களை மீட்பதற்கான பணிகளை அவசரமாக மேற்கொள்ள மீட்புக் குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.