உலகம் முழுவதும் 111 டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக , உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த வைரஸ் மேலும் பிற பகுதிகளுக்கு வேகமாக பரவும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கி ஒரு ஆண்டை கடந்த பிறகும் அதன் தாக்கம் குறையவில்லை. இன்னமும் நோய் பரவல் மக்களை ஆட்டிவைக்கிறது. உடல் நிலையை தாண்டி மன ரீதியாகவும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு வாராந்திர தொற்றுநோய் புள்ளிவிபர பட்டியலை வெளியிட்டது. அதில் உலகில் 111 நாடுகளில் அதிக வீரியமுள்ள ‘டெல்டா’ வைரஸ் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா , ஆல்பா , காமா , பீட்டா என நான்கு வகை உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் , மிக விரைவாக பரவும் ஆற்றல் டெல்டாவுக்கு உள்ளது என கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் மிகக் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் அதிக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
கமெண்ட்: காலப்போக்கில் பெயர் வைக்க அலையவேண்டியதில்லை . கொரோனா பெயர்களே கவர்ச்சியாக இருக்கின்றன.