SOP யை மீறிய குற்றத்திற்காக கெடா மந்திரி பெசாருக்கு அபராதம் விதிக்கப்படும்; பினாங்கு காவல்துறை தகவல்

ஜார்ஜ் டவுன், ஜூலை 17 :

ஜூன் 5 ஆம் தேதி, ஜூரு ஆட்டோசிட்டியில் உள்ள ஒரு வாகன விற்பனை மற்றும் காட்சி மையத்தில் நிலையான இயக்க முறைமையை (SOP) மீறியதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி க்கு பினாங்கு போலீஸ் அபராதம் விதிக்கப்படும்.

கெடா மந்திரி பெசாருக்கு எதிரான அபராதம் விதிப்பது தொடர்பாக போலீசாருக்கு அறிவுறுத்தல் வந்துள்ளதாகவும், விரைவில் அபராதம் விதிக்கப்படும் என்றும் பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.

“அபராதம் விதிக்குமாறு உத்தரவின் உறுதிப்படுத்தல் பெறப்பட்டுள்ளது என்றும் அது விரைவில் மந்திரி பெசார் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் “பினாங்கு போலீஸ் படைத் தலைமையகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் கிடைக்கும் என்றும் அதன் பின்னரே அபராத நோட்டீஸ் வழங்கப்படும்” என்றும் அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

முந்தைய அறிக்கைகளின்படி, இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 269 மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் (பாதிக்கப்பட்ட உள்ளூர் பகுதிகளுக்குள் நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2021 இன் பிரிவு 17 (1) இன் கீழ் விசாரிக்கப்பட்டது.

முகமட் சனுசி என்று நம்பப்படும் ஒரு நபர் குறித்த காட்சி மையத்தில் ஒரு காரை சோதனை செய்ததாக காட்டும் வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் வைரலாகியயது.

இந்த சம்பவம் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருந்தபோது நடந்தது என்றும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு தடை செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here