மக்களவை உறுப்பினராக பதவி

ஏற்றார் விஜய் வசந்த்

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் வசந்திற்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. 

மறைந்த வசந்தகுமார் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

இத்தேர்தலில் விஜய் வசந்த் 5,76,037 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பாஜக சார்பாக போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 4,38,087 வாக்குகளைப் பெற்றார்.

இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விஜய் வசந்த் மக்களை உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழில் பதவியேற்றுகொண்ட அவர் , பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here