34 உயர் அதிகாரிகள் வேலை பாழ்!
சென்னை:
தமிழக ஆவின் பால் நிறுவனத்தில் முறைகேடு புகார் எதிரொலியாக 34 உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவினில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பால்வளத்துறை அமைச்சரான நாசர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆவின் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து ஆவின் நிறுவனங்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், ஆவின் வர்த்தகப் பிரிவு பொது மேலாளர்களாக இருந்த ரமேஷ் குமார், புகழேந்தி, முத்துக்குமரன், அன்பு மணி, வசந்த் குமார், செல்வம், முருகன், செம்பருத்தி உள்ளிட்ட 34 முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் கந்தசாமி பிறப்பித்துள்ளார்.