நேற்று மட்டும் சுமார் 460,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது; சுகாதார அமைச்சர் தகவல்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24:

கோவிட் -19 வைரஸிற்கு எதிரான தொடர்ச்சியான முயற்சியில் மலேசியா தனது வேகத்தை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. நேற்று (ஜூலை 23) மொத்தம் 462,242 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்திற்கான கேள்விகளை உறுதி செய்வதற்கான சிறப்புக் குழுவின் (JKJAV) கூற்றுப்படி, இதுவரை மொத்தமாக 16,487,158 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறியப்படுகின்றது.

இதில், குறைந்தபட்சம் முதல் டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 11,222,398 ஆகவும் , தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்கள் 5,264,760 பேர் என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு இடுகையின் வழி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here