ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
கொரோனா வைரஸ் மனிதன் வெளியேற்றும் வாயு மூலமும் பரவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மக்கள் வெளியேற்றும் வாயு மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என பரிந்துரைக்கும் வெளிநாடுகளின் நம்பகமான ஆராய்ச்சியை பரீசிலிப்பதாக பிரித்தானியா அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஒரே கழிப்றையைப் பயன்படுத்திய இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், விஞ்ஞான ரீதியாக இது உறுதிப்படுத்தப்படவில்லை, பெரும்பாலும் கொரோனா வைரஸ் வாய், மூக்கு வழியாக பரவுவதாகக் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வில் கொரோனா வைரஸ் மலம் சார்ந்த கழிவுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுகள் கழிவுநீரில் கண்டறியப்பட்டுள்ளன.
ஆனால், கொரோனா வைரஸ் வாயு மூலம் பரவுவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
ஏனெினில் உள்ளாடைகள், உடைகள் முகக் கவசம் போலவே தடையாக செயல்படக்கூடும் என கூறப்படுகிறது.