ஆபாச பட வழக்கு – விசாரணை தீவிரம்!
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா?, அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் குழுவின் தணிக்கை வளையத்தில் ராஜ்குந்த்ராவின் வயான் இண்டஸ்ட்ரீஸ், ஆபாச படம் வெளியிட்டு மோசடி செய்த நிறுவனத்தின் கணக்கு, ஷில்பா ஷெட்டி இயக்குநராக செயல்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கு ஆகியவையும் அடங்கும். ஆபாச பட தொழில் மூலம் ராஜ்குந்த்ராவிற்கு வெளிநாட்டில் இருந்தும் பணம் கிடைத்து உள்ளது. அது ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே அவருக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் கிடைக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி மீது வலுவான ஆதாரங்கள் ஏதேனும் சிக்கினால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.