சுகாதார அமைச்சகம் திங்களன்று (ஆகஸ்ட் 2) 15,764 புதிய கோவிட் -19 தொற்றினை பதிவுசெய்தது. ஒட்டுமொத்தமாக 1,146,186 நோய்த்தொற்றுகளைக் கொண்டு வந்தது.
6,067 தொற்றுடன் சிலாங்கூர் முதலிடத்திலும், கோலாலம்பூர் (1,536) மற்றும் ஜோகூர் (1,222) அடுத்தத்த இடத்தில் இருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டுவிட் செய்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட தொற்றுநோய்களின் எண்ணிக்கை பின்வருமாறு: சபா (1,166), கெடா (1,108), நெகிரி செம்பிலான் (862), பேராக் (748), பினாங்கு (667), கிளந்தான் (552), பகாங் (475), மலாக்கா (463), தெரெங்கானு (425), சரவாக் (411), புத்ராஜெயா (46), பெர்லிஸ் (ஒன்பது) மற்றும் லாபுவான் (ஏழு).