கடந்த 24 மணி நேரத்தில் 18,762 கோவிட் -19 தொற்று பதிவாகியுள்ளதாக் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார இயக்குநர் தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 1,765,016 ஆக உள்ளது என்றார்.
சிலாங்கூரில் 3,711 தொற்றுகள் என பதிவாகியுள்ளன. இதைத் தொடர்ந்து சபா (2,430), சரவாக் (2,414), ஜோகூர் (1,993), பினாங்கு (1,762), கெடா (1,585), கிளந்தான் (1,504), பேராக் (899), பகாங் (715), கோலாலம்பூர் (573), தெரெங்கானு (506), மலாக்கா (309), நெகிரி செம்பிலான் (291), புத்ராஜெயா (34), பெர்லிஸ் (33), மற்றும் லாபுவான் (3).