ஜெனீவா: கொலம்பியா நாட்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘மூ’ என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த மூ கொரோனாவை ‘கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக’ பட்டியலிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது வேக்சினில் இருந்து தப்புமா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறது.
கடந்த 18 மாதங்களாக கொரோனா வைரஸ் தான் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய தலைவலியாக உள்ளது. முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த உருமாறி கொரோனா கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் மோசமான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.