கோவிட் -19 டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ்களில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க மைசெஜ்தெரா குழுவுக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான சிக்கல்கள் உட்பட செயலி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க மைசெஜ்தெரா குழுவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் வியாழக்கிழமை (செப்டம்பர் 9) செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
தற்போதைக்கு, முழு தடுப்பூசி போடப்பட்ட ஆனால் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் கைப்பேசியில் இருப்பதை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். சிலாங்கூர் அரசாங்கத்தின் செல்வாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடப்பட்டவர்கள், சிலாங்கா பயன்பாட்டில் வழங்கப்பட்ட சான்றிதழ்களைப் பயன்படுத்தலாம்.
அவர்கள் மைசெஜ்தெராவில் டிஜிட்டல் சான்றிதழ் பெறும் வரை இப்போதைக்கு அதைப் பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார். மாநிலங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிப்பதில் ஆபத்து மதிப்பீடுகளை செய்கிறார்கள் என்று கூறினார்.
நான் இந்த விஷயத்தை சுகாதார தலைமை இயக்குனரிடம் தொடர்ந்து விவாதித்து வருகிறேன். சரியான நேரம் என்று நாங்கள் உணரும் போது, நாங்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு பரிந்துரை செய்வோம். இப்போதைக்கு, நாம் அனைவரும் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருப்போம் என்று அவர் கூறினார்.