பத்திரிகையாளர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பத்திரிகையாளர்களை கைது செய்து தனி அறையில் சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி தாக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர் மார்கஸ் யாம், மற்றும் ஆப்கன் செய்தி நிறுவனம் இந்தப் படங்களை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளனர். அதில், இரண்டு பத்திரிகையாளர்கள் உள்ளாடையுடன் நிற்கவைக்கப்பட்டு பின்புறத்திலிருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கு முதுகிலும் பின்புறத்திலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏழெட்டு தாலிபன்கள் தங்களை தொடர்ந்து கைத்தடிகளால் 4 மணி நேரத்துக்கும் மேலாக தாக்கியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதனால் ஆப்கானில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here