கடந்த 24 மணி நேரத்தில் 8,075 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில் சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,285,640 ஆக உள்ளது.
சரவாக் அதிகபட்சமாக 1,189 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து கிளந்தான் (1,020), பினாங்கு (853), ஜோகூர் (781), சிலாங்கூர் (686), சபா (677), தெரெங்கானு (636), கெடா (628), பேரக் (548), பகாங் (522), மலாக்கா (219), கோலாலம்பூர் (151), நெகிரி செம்பிலான் (108), பெர்லிஸ் (36), புத்ராஜெயா (19) மற்றும் லாபுவான் (2).