மோட்டார் வண்டி மற்றும் லோரியை உட்படுத்திய ஒரு விபத்தில், 2 வயது குழந்தை பலி

கோலாலம்பூர், அக்டோபர் 21 :

ஜோகூர், கோத்தா திங்கியிலுள்ள ஜாலான் மாவாய்-கோலசெடேலி சாலையின் 4 கிலோமீட்டர் தூரத்தில் பெண் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் வண்டி விபத்துக்குள்ளானதில், 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

21 வயதான மோட்டார் வண்டி ஓட்டுநரின் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் தற்போது கோத்தா திங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹுசின் ஜமோரா கூறுகையில், காலை 11.55 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் மோட்டார் வண்டி மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியுடன் உள்ளூர் ஆடவர் ஓட்டி வந்த லோரி ஆகியவை மோதி இந்தச் சம்பவம் நடந்தது.

“கோலசெடெலியில் இருந்து மாவாய் நோக்கி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் சென்ற பெண்ணின் மோட்டர் வண்டியில், திடீரென பின்னால் இருந்து அதே திசையில் வந்த லோரி மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

“இதன் விளைவாக, மோட்டார் வண்டி ஓட்டுநருக்கு தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் இரண்டு வயதான குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று ஹுசின் கூறினார்.

மேலும் சாலைப் பயனர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சாலை விதிகளை பொதுமக்கள் எப்போதும் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here